10/15/2016

சொல்லிவிட்டுப் போ


யன்னல் கம்பிகளின் இடுக்கினிலே
சிக்கித்தவிக்கும் என் இரவு நிலவு

கண்கள் இரண்டும் குளமாகி
அரிவி கொட்டும் என் கண்கள்

சொல்லிய வார்த்தைகளெல்லாம்-உன் 
உள்ளத்தில் இருந்து வந்ததா

நான் உனக்காக வளரவில்லை - என்னை
உனக்காகவும் வளர்க்கவில்லை

உனக்கான துணையாக மாற்றினாய்
அதற்காகவே என்னை நான் மாற்றினேன்

எதற்காக வெறுத்தாய் காரணமின்றி
ஒரு முறை சொல்லிவிடு போகிறேன்

இந்த நிலவும் வேண்டாம்
கரு இரவும் வேண்டாம்

தனிமையில் ஓரு மூலையில்
என்னை நானே காதல் செய்வேன்

எதற்காக வெறுத்தாய் 
சொல்லிவிட்டுப் போ





No comments: