இறுதியாக தந்த முத்தம்
இன்னும் ஈரம் மாறாமல்
என் கன்னங்களில்
ஊற்றெடுக்கிறது
துயிலும் அறையில் - உன்
ஒற்றைத்தலையணையை
கட்டி அணைத்தே
காலம் கழிக்கிறேன்
நீ விட்டு போன
சுவாசக்காற்றுகள் -என்னை
சுற்றி சுற்றி வந்தே
நினைவை தூண்டுகின்றது
ஒரு முறையேனும்
உன் அழைப்புவராதா என
காத்து கிடந்தே என்
தொலைபேசி செத்துவிட்டது
விட்டு சென்ற
எச்சங்களை அளித்துவிட்டு போ
இல்லை என்னை வந்து
அள்ளிக்கொண்டு போ
என்னோடு நான் பேசும்
கொடூரத்தை மட்டும்
தந்துவிடாதே
நான் செத்துவிட மாட்டேன்
Tweet | |||||
No comments:
Post a Comment