10/30/2011

கடவுள் காதலுக்கு போட்டுவிட்ட மாலை


நினைவு தேடி ஓடுகின்ற நெஞ்சம்
நிழலைக்கூட காதலிக்கும் உள்ளம்
இடைவெளிகள் கொடுமை செய்யும் காலம்
எப்பொழுது இரண்டும் ஒன்று சேரும்

நிலவை பிரிந்து வாழ்வதிங்கு கொடுமை
மன்னன் காதலுக்கு வந்ததிங்கு வறுமை
கடலும் வானும் தூரமான போதும்
மலை நீரின் மூலம் தொடுவதிங்கு இனிமை

மேகம் கலைந்த இருண்ட வானில் கனவு
காதல் பூக்கள் கொண்டு மாலை சூடும் வயது
வேள்வி தொடங்கி காலம் நூறு கடந்தும்
காத்திருக்கும் வாழ்வு ஒரு சாபம்

காதல் மட்டும் வாழுகின்ற உலகில்
தேடல் கொண்டு காதலித்த பொழுதில்
காத்திருப்பின் கொடுமை செய்யும் வேலை
கடவுள் காதலுக்கு போட்டுவிட்ட மாலை

10/23/2011

தலைவா உனக்கு நன்றி சொல்ல


தலைவா உனக்கு நன்றி சொல்ல

தலைவா உனக்கு நன்றி சொல்ல
தவமிருப்பேன் தனியாக
விரைவாய் உன்னை காண்பதற்கு
விழித்திருப்பேன் பகலாக

சுகமாய் உனக்கு சுகம் தரவே
இனித்திருபேன் கனியாக
நிறைவாய் உன்னை மகிழ்விக்க
மறந்த்திடுவேன் நான் உயிராக

கனவாய் நான் காத்திருக்கிறேன்
கண்களில் ஏக்கம் சேர்த்திருக்கிறேன்
விரல்களில் ஸ்பரிசம் தேடிநின்று
சிந்தை முழுக்க சிலிர்த்திருக்கிறேன்

படைகளின் வீரம் கொண்டவனே
பகைகளை அடக்கி ஆள்பவனே
மெதுமகள் மேனி தொடுவதற்கு
உன் கருணையின் கண்களை திறந்துவிடு

10/16/2011

சுறுசுறுப்பை சொல்லிவிடும்


சாளரத்தின் சேலையை
சற்று நான் திறக்கையில்
வெட்கம் கொண்டு காலைப்பொழுது
கட்சிதமாய் விடிகிறது

போர்வை விலக்கி குயில்கள் கூவ
பனி நீரை எடுத்து இலைகள் மூள்க
சோம்பல் முறித்த சூரியானோ
ஆம்பல் கண்ணை திறக்கின்றான்

சாலையில் வாகனம் ஊர்வலம் செல்ல
சடுதியாய் மஞ்சள் சிவப்பு சமிஞ்சை விழ
மனசு ஒருமுறை நிற்கிறது
மறுபடியும் ஏதோ நினைக்கிறது

வேகநடை இரண்டு கால்கள்
பறந்து செல்லும் நாலு சில்கள்
சுறுசுறுப்பை சொல்லிவிடும் - நான்
முழுஇரவு பணிமுடித்து திரும்பும்போது

10/10/2011

விடியலை காண துடித்திடும் நினைப்பு


கண்ணை மூடும் கருப்பு வாணம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று

அடங்கிப்போகும் அவசர உலகம்
ஓய்வு எடுக்கும் இடைவெளி நேரம்
குடும்பம் கூடும் நிலவு முற்றம்
ஊரை கெடுக்கும் குடிகாரன் சத்தம்

குறைகளை சொல்லும் மனைவியின் நேரம்
தேவையை கேட்க்கும் பிள்ளையின் சிணுங்கள்
கணக்கு பார்க்கும் அப்பனின் மூளை
போர்வைக்குள் அடங்கும் இயலாமை யுத்தம்

தலையணை மந்திரம் சொல்லிடும் இரவு
தரணியை ஆள போட்டிடும் கணக்கு
கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு

வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்