12/09/2009

காதலியின் ஏக்கம்

11/19/2009

அன்புள்ள அம்மா

11/17/2009

வன்னியில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.

2008 மார்கழி மாதம் இந்தியா சென்றபோது பிளாக்கர் சமந்தமாக கனடாவில் இருந்தது வந்த அண்ணா கதைத்தார். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் பிளாக்கர் வைத்திருக்கிறார்கள் கவிதை போடுகிறார்கள் என்றார். சிறுவயதில் இருந்து கொப்பியில் எழுதிவைத்த கவிதைகளை போடலாம் ஆனால் பெரியாட்களுக்கு முன் எனது கவிதை எடுபட வேண்டுமென்றால் பெயரிலாவது பெரியாள் போல் காட்டவேண்டும் என சிந்தித்தேன். சிந்த்திதுகொண்டே இலங்கை வந்தேன்.

இலங்கைக்கு வந்து அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். மேசையில் ஒரு கடிதம். இதோ கடிதம் . ஒரு சில காரணங்களுக்காக பெயர்கள் மறைக்கபட்டுள்ளது .

வன்னி வள்ளிபுனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன் .




ஆச்சரியம் கணணி பாவனை குறைந்த வன்னியில் இருந்து இந்த இடம்பெயர்வுக்குளும் பிளாக்கர் சமந்தமாக Colombo இல் இருக்கும் எனக்கு எழுதுகிறார். ஆரம்பிதேன் 16 17 வயதில் இருந்து யாருக்கும் காட்டாது எழுதிவைத்த கவிதைகளும் பல்கலைகழக சுவர்களில் எழுதிய கவிதைகளும் புதிதாக எழுதுகின்ற கவிதைகளும் என 99 கவிதைகளை பிரசுரிதேன்.

எனது கவிதைகளை பார்க்க உயிருடன் வருவாரா வந்தாலும் முகாமில் இருந்து எப்ப வந்து எப்ப பார்பார் என்ற ஏக்கம் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது .

வந்தார் குடும்பத்துடன் ஒருவித பிரச்சனையும் இன்றி. முகாமில் இருந்தார் தொடர்பு கொண்டார். இப்பொழுது முகாமில் இருந்து வெளியில் வந்து எனது 100 வது படைப்புக்கு ஆசியும் எழுதி தந்தார் . அவர் வேறு யாருமில்லை பூங்கோதை படைப்புகள் http://www.poonka.blogspot.com/ பளோகரின் சொந்தகாரி .
அவரது ஆசி கவிதை இதோ. கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன்

யாதவன்!!! யாரவன்???
வார்த்தை மந்தைகளைச் சாய்த்து
வருடி மெல்லக் கொடுத்துத் தன்

வலிந்த உணர்வுகளை ஊட்டி அவற்றை

வழிநடத்தும் நல்ல மேய்ப்பன்
யாதவனாய் யாழவனாய்

யாத்துப் பல கவியமுதம் பின்னலூடே
யாவரும் சுவைப்பதற்காய்
யாசகமாய்த் தந்தவன்
தவழும் கவிக் குழவியாக என்முன்
தத்தி வந்த அவன் கண்களுக்குள்

தத்துவம் மிளிர்ந்தது கண்டேன்- அடடா இவன்

தவழ வேண்டியவனா..
வேண்டவே வேண்டாம்..

தம்பி எழடா என்று கை கொடுத்து

தூக்கி விட மட்டும் தான் முயன்றேன்

திரும்பிப் பார்ப்பதற்குள்.. அடடா

திடுமெனப் பாய்ந்துவிட்டான்


தம்பி யாதவா..

யாழ் மண்ணின் மாதவமே..

மூச்சிரைக்குதடா உன்னை
அண்ணார்ந்து பார்க்கையிலே

நூல் ஒன்று போதும் நீ
நிலாவைப் பிடித்து விடுவாய்- உன்

மூக்குக் கண்ணாடியில் ஒரு ஐயம்..
அதன்
மூலப் பொருள் என்னவோ??
நொந்து போன உறவுகளின் நெஞ்சுக்குள்

நுழைந்து பார்க்கிறாயே..
“தேவதையே எனது வேண்டுதல்”
என்ற
தெவிட்டாத பாவிலே-எம்
தேம்பலை அனுபவித்துப் பாடினாய்

நன்றி சகோதரா...
நம்புகிறோம் இன்னமும்நாம்

நாதியற்றுப் போகவில்லை-உன்

பேனா எம்மினத்தைப் பிரதிபலிக்கும்..


மரபிற்குள்ளும் உன் கவிவாசனை

மெல்ல வீசுகிறதே... மகிழ்ச்சி

காதற் பாக்களின் மென்னடையால்-உன்

காலடி வீழும் ரசிகர் உள்ளம்
கற்பனைகளின் ஆழம் கட்டியம் கூறுது- நீ

கவிஞன் தான் என்று

இன்னும் உன் புகழ் அதிகம்

இயம்பிடத்தான் விரும்புகிறேன்-ஆனால்

இல்லை என்னிடம்வார்த்தைகள்

இடையிலே சிக்குது உணர்வுகள்

பலம் பல இருந்த போதும்,
தம்பி
பலவீனம் ஒன்று கண்டேன்
எதிர்மறை உணர்வுகள் அதிகம்

எம்பிக் குதிக்கிறது உன்னுள்..

தமிழினம் அழுதது போதும்

துயர்மனம் துவண்டது போதும்
சேமம் விசாரிப்பது பண்பாடு
அது தேவை தான்

சேர்ந்து அழுவது ஒப்பாரி

சோர்ந்த உளத்துக்கு அதுவும் தேவைதான்
இதையெல்லாம் செய்வதற்கு
பலருண்டு இவ்வுலகில் -உன்
பேனாவின் பணியாக
இன்னுமொன்று
புதிதாகச் சேர்த்துக் கொள்
உளம் சோர்ந்து போனவர்க்கு

உரமூட்டும் பணி செய்

சாய்கின்ற உணர்வுக்கு
சவால் ஊட்டும் பணி செய்
மரணித்தது தமிழன் மட்டுமே-அவன்

மானம் அல்ல என உணர்த்து

புதைந்து போன சிந்தனைக்கு

புத்துணர்வு ஊட்டு

சலனமின்றி ஒதுங்குகின்ற

சமூகத்தைச் சாடு
சாக்கடை மனம் கொண்டோர்க்கு

சாட்டையாலே போடு -அது

சத்தியமாய் உன்னினத்தை

சரித்திரத்தில் நிமிர வைக்கும்


வாழ்க நீ நீடு

வளர்க நின் சிந்தனைக் கோடு

நீள்க உன் கவிப்பயணம்

நிமிர்க நீ இவ்வுலகில் மேலும்..


அன்புடன்
பூங்கோதை

நிலமதி அக்காவையும் குறிப்பிட வேண்டும் முதன் முதலில் தனிபட்ட முறையில் தொடர்பு கொண்டவர். வாழ்த்தினவர். அவரது வாழ்த்தும் இதோ

யாதவனின் 100.......வது படைப்புக்கு என் பாராட்டுக்கள்.

நவீன விஞ்ஞான உலகில் கணணி மிகப்பெரும்பங்கு வகிக்கிறது .தற்கால இளையோர் முதல் ஆர்வமுள்ளவர்களிடையே ,தங்கள் கவிதை கட்டுரை கதைகள் போன்றவற்றை, தமது உள்ளத்து வெளிப்பாட்டை உணர்த்த வலைப்பதிவு வழிசமைக்கிறது .என் தமிழ் வாசிப்பு ஆர்வமிகுதியால் கண்டு பிடித்த தளம் தான் "கவிக்கிழவன் பக்கம்:" இவர் ஒரு துடிப்பான , சமூக சேவையில் ஆர்வமுள்ள இளையவர். இவரது கவிதைகள் , தாயக அவலங்கள் பற்றிய பகுதிகளை மிகுந்த ஆர்வமுடன் படிக்கும் நூற்றுக் கணக்கான வர்களில் நானும் ஒருத்தி . இவரது கவிதைகள் காதல் சோகம் தனிமை என்ன்பவற்றை தாங்கி வரும் .அவ்வப்போது ஈழத்து அவலங்களை பற்றி ,மக்களின் துயரம் அவல வாழ்வு என்பவற்றை கலை நயத்துடன் வெளிக்கொண்டு வருவதில் இவரின் படைப்புக்கள் பெறும் பங்கு வகிக்கிறது .பதிவர் உலகில் நானும் இவரது நட்பு .என்னை கவர்ந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர் .யாதவன் எனும் இயற் பெயர் கொண்ட இவர் இலங்கை வலை ப்பதிவாளர்களில் ஒருவர் .இவரது நூறாவது பதிவு வெளி வரும் இவ்வேளை மேலும் சிறந்த படைப்புகளை தனது ,வலியுலகின் சிறந்த படைப்பளியாக வாழ்த்துகிறேன். இதனை ஏனைய வாசகர்கள் முன் கூறுவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். நட்புடன் நிலாமதி

இந்த்நேரத்தில் எனதது கவிதையை வாசிபவர்களுக்கும் பின்ஊட்டம் இடுபவர்களுக்கும் வாக்கு இடுபவர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.


11/01/2009

காதல் மனம்

10/13/2009

அதிகாலை காதல்

கரு வண்டின் கதறல் ( காதல்)


நம் கையெ ஓங்கும்



10/01/2009

இன்று சர்வதேச சிறுவர்தினம்

பிள்ளை அப்பா எங்கே

முள்ளிவாய்க்காளில்

இறுதியாக போர்நடந்த இடம்


அப்பா இறந்துவிட்டார்

இல்லை நான் அவர்உடலை

பார்க்கவில்லை


இறைவனுக்கே தெரியாது

எத்தனை பேர் இறந்ததென்று

உன் அப்பா சாம்பலாகிவிட்டார்


இல்லை

மீளக்குடியேறும்போது

அப்பாவை சந்திப்பேன்


இன்று சர்வதேச சிறுவர்தினம்

கொண்டாடுகிறார்களா

கொண்டு ஆடுகிறார்களா


வாழ்த்து தெரிவிக்கிறார்களா

வாழ்த்தமுன் வாடிவிழும்

பிள்ளைகளுக்கு

9/29/2009

இறப்பதற்கு யாருமே இல்லை


நான் இறந்தால்


தூக்குவதற்கு

நாலுபேர் இல்லை

நான் இறந்தால்

கவலைப்பட

மூன்றுபேர் இல்லை

நான் இறந்தால்

அழுவதற்கு


இரண்டுபேர் இல்லை

நான் இறந்தால்

கொள்ளிவைக்க

ஒருமகன் இல்லை

நான் இறந்தபின்

இறப்பதற்கு குடும்பத்தில்

யாருமே இல்லை

9/28/2009

உடன்நிகழ்காலம்

உடன்நிகழ்காலம் உருக்குலைந்துவிட்டது

உண்மைகள் எல்லாம் தலைகுனிந்துவிட்டது

உணர்வுகள் இப்போ வரையருக்கப்பட்டது

உணர்ச்சிகள் எல்லாம் நிலைகுலைந்துவிட்டது



உங்களுக்கென்றுதான் நிதி திரட்டப்பட்டது

உண்மையில் அது சூரையாடப்பட்டது

உயிரனங்கள் எல்லாம் ஊனமாக்கப்பட்டது

உள்ளங்களின் வேதனைவடுக்கள் புதைக்கப்பட்டது



உச்சக்கட்டத்தில் உயிர்கள் கொல்லப்பட்டது

உத்தமர்கள்போல் ஊடகங்கள் காட்டிக்கொண்டது

உருவாகமுன்னே சிசுக்கலைப்பு நடந்தேறியது

உறவுகள் மூச்சுவிட முடியாது நசிக்கப்பட்டது



உயிருடனே உடல்கள் எரிக்கப்பட்டது

உண்ணாநிலைகூட மறுக்கப்பட்டது

உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டது -இப்போ

உலகமே தமிழரை கைவிட்டுவிட்டது


9/18/2009

யார் நாம்


யாருக்குமுன் யார்போவார்

யார் இருப்பார் யார் அழைப்பார்


யாருக்கும் சொந்தமில்லா உலகில்


யாருடன் யார் இருப்பார்



யாருக்கும் உதவாத உடலை


யாரையோ பெறுவதற்கு


யாதகம் பார்த்து


யாருக்கோ கட்டிவைப்பார்



யாருடனும் யாருமில்லை

யாருக்கும் யாருமில்லை

யாரும் உதவிக்கில்லை-நாம்


யாரென்றும் தெரியவில்லை


பரம்பரையே ??????

வேரறுத்து குடும்பங்களை

ஊரைவிட்டு ஓடவைத்தார்

பாரினிலே யாவருக்கும்


உரிமையில்லை என்றுரைத்தார்



வீடிளந்த எம்மரை வெறும்

வெட்டையிலே தங்கவைத்தார்


காடறுத் செய்த இடம்

வெள்ளத்தில் மூள்கினதோ



சோறுமில்லை யாருமில்லை

சொந்தம் கொள்ள பெயருமில்லை


நாடிலந்து நிற்கும்நிலை

நாயைவிட கேவலம்தான்



வேளாமை செய்துவைத்தோம்
- பெரும்

பேராண்மை கொண்டுநின்றோம்


ஏலாமல் வந்தவனை


விருந்தோம்பி ஏற்றிவைத்தோம்



பாலாறு பசுக்களையும்


சோராத வயல் குளங்களையும்


பரம்பரைக்கே சேர்த்துவைததோம்

இன்று பரம்பரையே இல்லையென்றோம்



9/16/2009

ஒரு தாயின் கதறல்

நெருப்புக்குள் கண்வைத்தேன் என்

நெஞ்சுக்குள் சொல்வைத்தேன்


கண்முன் நடப்பவற்றை


கடவுளுக்கே சொல்லிவைப்பேன்

* * *

மார்பிலே பாலுமில்லை


வந்தாலும் பிள்ளையில்லை


பானையில் சோறுமில்லை


இருந்தாலும் கொடுக்க ஆக்களில்லை

* * *

ஊரக்கு போவதாற்காய்

எத்தனை நாள் ஏங்கிநின்றேன்


முள் வேலியைத்தாண்டுவதற்கு


எத்தனைநாள் மூச்சுவிட்டேன்

* * *

குளிப்பதற்கு இடமுமில்லை


குளித்துஉடைமாற்ற மறைவுமில்லை


குடிப்பதற்கே தண்ணீர் இல்லை


குந்திவிட்டு கழுவ எங்கேபோவோன்

* * *

பத்தடியில் வீடுதந்தார் அதற்குள்


பத்தபேரைத்தங்கவைத்தார்


படிப்பதற்கும் வசதியில்லை


படிக்கச்செல்ல பிள்ளையில்லை

***

செத்தவர்களை சொல்லவில்லை-அவர்கள்


செத்தனரா தெரியவில்லை


கைதானவர்கள் எங்கு இருப்பர்-அதில்


என் பிள்ளையுண்டா தெரியவில்லை


9/13/2009

தேவதையே எனது வேண்டுதல்
















மழை வேண்டாம்

அகதி முகாம் வெள்ளத்தில்

மூழ்க வேண்டாம்


வெய்யில் வேண்டாம்

பச்சைக் குழந்தைகள் அகதி முகாமில்

சிறுவீட்டுக்குள் காயவேண்டாம்


காற்றுவேண்டாம்

அகதி முகாமில்

தொற்றுநோய்பரவி சாகவேண்டாம்


உணவு வேண்டாம்

விருந்தோம்பும் தமிழன்

கையேந்தி நிற்கவேண்டாம்


கனவு வேண்டாம்

கனவு முழுக்க இறந்த உறவுகளின்

நினைவுவேண்டாம்



கடவுள் வேண்டாம்

பெற்றோரை இளந்து

ஆனாதைகளான பிள்ளைகள் வேண்டாம்


தண்ணீர்வேண்டாம்

குடிக்கும்தண்ணீர் எல்லாம்

தமிழனின் கண்ணீராக வேண்டாம்


கத்திவேண்டாம்

சிசுக்களை கருவிலேயே

கொல்ல வேண்டாம்


பாக்கிஸ்தான் இந்தியா சீனா வேண்டாம்

தமிழரை அளிக்க

ஆயுதம் அனுப்பவேண்டாம்


சர்வதேசம் வேண்டாம்

சதிதீட்டி தமிழரை

கொல்ல வேண்டாம்
















தேவதையே நான் கேட்பது என்ன என்பது

உனக்கு புரியவேணும்

நான் தேவதையை அனுப்புகிறேன் இவர்களுக்கு


சுமஜ்லா

சக்தி


தியாவின் பேனா


அகல் விளக்கு


தமிழரசி

9/11/2009

தூங்கதே தம்பி



8/30/2009

8/17/2009

என் இதயம்



8/06/2009

8/02/2009

பூந்தோட்டம்

7/31/2009

இக்கணை யாரதோ

7/19/2009

ஏக்கத்தின் எல்லை



திரும்பிப்பார்த்தேன்

சரிகை சருசருக்கநடக்கிறார்கள்

எத்தனை வீடுகள் ஏறிஇறங்கியிருப்பர்

என் அகராதியில் எழுதப்பட்டுவிட்டது

எனக்கு ஏமாற்றம்தானென்று

இருந்தும் ஒரு நப்பாசை

என்னையும் பிடிக்குமென்று

என் உழைப்பில்தான்

எங்கள் குடும்பம்

ஒவ்வொறுமுறையும்

தட்டங்கள் நிரப்பவே

சேமித்தபணம் செலவளிந்துவிடும்

சிரித்தமுக்துடன்

வாசல்படிஏறிவந்து

கதைத்துப்பேசி

பலகாரங்களைத்தின்றுவிட்டு

பசுமையான எங்கள் குடும்பம்போன்ற

வெற்றிலையை கையிலெடுத்து

என்வாழ்க்கை போன்ற

காய்ந்த பாக்கை அதற்குள் போட்டு

வெள்ளைமனசு சுண்ணாம்பை

மெதுவாகத்தடவி

ஒரேசுருட்டுசுருட்டி

வாய்க்குள்போட்டு அரைத்துவிட்டு

போகுமபோது வாசலில் துப்பிவிடுவர் சிவப்பாய்

என் வாழ்க்கையையும் சேர்த்து.

7/15/2009

ஊரைப்பிரிந்து

பிணங்களும்
பிணவாடைகளும்
கழுகளின் காரியாலயங்களும்
வட்டில்லா தென்னைகளும்
பற்றைமண்டிய வீடுகளும்
கோபுரம் இடிந்தகோயில்களும்
பள்ளம் விழுந்த வீதிகளும்
இது எந்தன் கிராமமா
இல்லை செவ்வாய்க்கிரகமா
ஊரைச்சுற்றி சோலைகள்
கைகூப்பவைக்கும்
மணிஓசைகள்
விளைச்சல் தரும் வயல்கள்
பாலரிவிபோல் கால்நடைகள்
ஆங்காங்கே அழகிய கூரைவீடுகள்
குளைதள்ளும் வாழைகள்
பனைதரும் நொங்குகள்
பாட்டி சொல்லும் கதைகள்
இதுதான் என் கிராமம்
எப்போ செல்வோம்
எங்கள் இறுதிமூச்சைவிட

6/27/2009

காதல் போட்டி

6/26/2009

பதவி உயர்வு

6/23/2009

6/20/2009

காதல் பார்வை

6/09/2009

6/05/2009

6/04/2009

கவிமகளே

6/02/2009

எனக்காக